NEWS
Thursday, May 31, 2012
Tuesday, May 29, 2012
Tuesday, May 8, 2012
நீங்களூம் ரீமிக்ஸ் செய்யலாம்.
பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல
பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட்
இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர்.
ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.ரீமமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் மேக்னெடிக் டேப் மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது.
இசையில் மட்டும் அல்ல கலையிலும் இலக்கியத்திலும் கூட ரீமிக்ஸ் இருப்பதாக இந்த கட்டுரை சொல்கிறது.
இவை ஒரு புறம் இருக்க இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு ரசிகர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு.ரீமிக்ஸ் மூலம் ரசிகர்களூக்கு தாங்கள் ரசிக்கும் பாடல்கள் மீது கூடுதல் உரிமை கிடைக்கிறது.
இந்த கருத்தில் உங்களூக்கும் உடன்பாடு இருந்து நீங்களும் ரீமிக்ஸ் செய்ய விரும்பினால் மாஷ்ரூம் தளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
மாஷ்ரூமில் இசைப்பிரியர்கள் தாங்கள் விரும்பும் எந்த பாடலையும் இஷ்டம் போல ரீமிக்ஸ் செய்யலாம்.
இதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த பாடலில் யூடியூப் கோப்பை பதிவேற்றுவது மட்டும் தான்.இதற்கும் கூட கஷடப்பட வேண்டாம்.பாடலில் யூடியூப் முகவரியை சமர்பித்தாலே போதும்.
அதன் பிறகு அந்த பாடலில் விரும்பிய ஒலிகளை சேர்த்து அவற்றின் அளவை ஏற்றி இறக்கி முற்றிலும் புதிய பாடலை உருவாக்கி கொள்ளலாம்.இப்பைட் ரீமிக்ஸ் செய்த பாடலை இந்த தளத்திலேயே கேட்டி ரசிப்பதோடு அதனை பேஸ்புக் டிவிட்டர் வழியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://mashroom.fm/
ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.ரீமமிக்ஸ் செய்யப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லும் இந்த கட்டுரை இசை உலகில் மேக்னெடிக் டேப் மூலம் அறிமுகமான தொழில்நுட்பமே ரீமிக்ஸ் கலைக்கும் வாய்ப்பளித்ததாக தெரிவிக்கிறது.
இசையில் மட்டும் அல்ல கலையிலும் இலக்கியத்திலும் கூட ரீமிக்ஸ் இருப்பதாக இந்த கட்டுரை சொல்கிறது.
இவை ஒரு புறம் இருக்க இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு ரசிகர்கள் ரீமிக்ஸ் செய்வது என்பது வேறு.ரீமிக்ஸ் மூலம் ரசிகர்களூக்கு தாங்கள் ரசிக்கும் பாடல்கள் மீது கூடுதல் உரிமை கிடைக்கிறது.
இந்த கருத்தில் உங்களூக்கும் உடன்பாடு இருந்து நீங்களும் ரீமிக்ஸ் செய்ய விரும்பினால் மாஷ்ரூம் தளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
மாஷ்ரூமில் இசைப்பிரியர்கள் தாங்கள் விரும்பும் எந்த பாடலையும் இஷ்டம் போல ரீமிக்ஸ் செய்யலாம்.
இதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த பாடலில் யூடியூப் கோப்பை பதிவேற்றுவது மட்டும் தான்.இதற்கும் கூட கஷடப்பட வேண்டாம்.பாடலில் யூடியூப் முகவரியை சமர்பித்தாலே போதும்.
அதன் பிறகு அந்த பாடலில் விரும்பிய ஒலிகளை சேர்த்து அவற்றின் அளவை ஏற்றி இறக்கி முற்றிலும் புதிய பாடலை உருவாக்கி கொள்ளலாம்.இப்பைட் ரீமிக்ஸ் செய்த பாடலை இந்த தளத்திலேயே கேட்டி ரசிப்பதோடு அதனை பேஸ்புக் டிவிட்டர் வழியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://mashroom.fm/
Saturday, May 5, 2012
உன்னில் நான்...
கவிதை ஒன்று கேட்கிறாய்..
எப்போது எழுத நான்..?
உன் குளியலறைக் கொக்கியில்
தொங்கித் தவமிருக்கும் டவலாய்,
உன் துளசிமாடப் பூஜையில்
நெற்றி வழி கீழிறங்கும் நீர்த்திவளையாய்,
நீ உடை மாற்றும் உள்ளறையில்
நிரந்தர நிலைக்கண்ணாடியாய்,
உன் சமையலறைச் ஜிவாலையில்
சிற்றிடை சிந்தும் சின்ன வியர்வையாய்,
உன் பூனை முடிக்கழுத்திலிருந்து இரண்டருவியாய்
கொட்டும் த(அ)ங்கச்சங்கிலியாய்,
உன் சன்னலோரத்தில் சிணுங்கும்
சின்னச்சாரலாய்,
நீ விரும்பி ஹம்மும் ராகதேவனின்
ரம்மிய இசையாய்,
நீ ரசிக்கும் பூந்தோட்டத்தில் புகுந்த
புதிய மலராய்,
நீ அணைக்கும் அனைத்துமாய்,
உனை அணைக்கும் அனைத்துமாய்,
பருவப்பரபரப்பில் திளைக்கிற என்னை,
கவிதை ஒன்று கேட்கிறாய்..
எப்போது எழுத நான்..?
காதலர் தின பரிசு
இன்று காதலர் தினமாம்....
நித்தமும் என்னை காதலிக்கும்
என் காதலிக்கு பரிசு தர சட்டை
துலாவி பார்த்தேன்...
காலாவதியான பேருந்து சீட்டும்,நகை அடமான
சீட்டும் இருந்தது..
அலமாரியை துழாவினால் கிடைத்தது
பொக்கிஷம்...
கார்ல் மார்க்சும்,லியோ டால்ஸ்டாயும்,
லெனினும் இருந்தனர்..
முதல் வரிசையில் வைரமுத்து சிரித்து கொண்டிருந்தார்..
ஆதலினால் காதல் செய்ய சொன்ன சுஜாதா
சந்தோசமாக சிரித்தார்....
அவளவு பேரையும் பாரபட்சமின்றி விற்று பரிசு
வாங்கி சென்றால்...
உனக்கு எது இவளவு காசு என்கிறாள்..???
சொன்னேன்...கண்ணீருடன் செல்லமாய் ஒரு
குட்டு..
கிடைத்துவிட்டது எனக்கு சிறந்த காதலன் விருது ...
நானும் எனது கவிதைகளும்...
பிரிவின் வலி....
முரன்பாடுகளின் காரணத்தினால்
பிளவு பட்ட நம் நட்பு பிரிவுகளைக்
கொடுத்திருந்தாலும்...
அசந்தர்ப்பமாக உன்னை நினைக்கும் போது
இதயத்தில் ஏற்படும் வலியை
மறைக்கமுடியவில்லை...
செல்பேசியை நோண்டிக் கொண்டிருக்கும்
வேளையில் உன் பெயரைக் கண்ட
கணப்பொழுதில் பெருமூச்சுகள்...
நாம் உரையாடிய பொழுதை
நினைவு படுத்துகின்றன...
விலங்குகளால் என் கரம்
கட்டியிருந்தாலும்
தினம் ஒருமுறை
உன் வீடு தாண்டும் பொழுது
உன்னைத் தேடும் கண்களைக்
கட்டுபடுத்த முடிவதில்லை...
Subscribe to:
Posts (Atom)
